districts

img

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி விரைந்து ஒப்புதல் வழங்க கோரி கையெழுத்து இயக்கம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி விரைந்து ஒப்புதல் வழங்க கோரி வெள்ளியன்று (ஜன.20) 46வது புத்தகக் காட்சியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவண செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை, மாநில பொதுச்செயலாளர் ஆர்.ராதிகா தொடங்கி வைத்தார். அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.