districts

img

கம்பெனியை மூடிவிட்டு உரிய இழப்பீட்டு தொகை வழங்காமல் ஏமாற்றுவதா?

திருவள்ளூர், டிச.28- மீஞ்சூர் அருகே கொண்டகரையில் தனியார் நிறுவனம் இழப்பீடு தொகையை குறைத்து வழங்கியதால் தொழிலாளர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரையில் ஜெர்மன் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் ஏஜென்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் கண்டெய்னர் நிறுவனம்  இயங்கி வரு கிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக 40க்கும் மேற்பட்ட நிரந்தர பணி யாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் தற்போது நிறு வனத்தை மூடுவதாக  நிர்வாகம் அறி வித்துள்ளது.  பணியாளர்களை நிறுத்தி விட்டு இழப்பீடு தொகையாக பணியாளர்களின் பணி மற்றும் பணி காலத்திற்கு ஏற்ப ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்பட உள்ள தாகவும் விரைவில் வீடுதேடி அதற்கான கடிதம் மற்றும் காசோலை வந்து சேரும் என நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். ஆனால் எதிர்பார்த்த தொகை வழங்காமல் பணியாளர்களுக்கு தலா ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளனர்.இது குறித்து கம்பெனி நிர்வாகத்திடம் கேட்டபோது அவ்வளவு தான் கொடுக்க முடியும் என கைவிரித்துள்ளனர். 17 ஆண்டுகள் கம்பெனிக்கு பணியாற்றிய நிலை யில் மேற்படி குடும்பத்தை நடத்த வும்,வேறு பணியை தேடிக் கொள்ள வும் இத்தொகை போதாது என கூறி வியாழனன்று (டிச 28),  கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மீஞ்சூர் காவல்துறையினர் கம்பெனிக்கு வந்து பணியாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி நிலுவை தொகை வழங்க வேண்டும், கம்பெனி நிர்வாக தலைவரை சந்திக்க வேண்டும் என பணியாளர்கள் கூறிய தால் துறைத் தலைவரை சந்திக்க நிர்வாகம் ஒப்புக்கொண்ட நிலையில் பணியாளர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.