districts

விரைவில் ஷவர் ஜெல், ஃபேஸ்வாஷ் உற்பத்தி கேரளா சோப் நிறுவனம் ரூ.1.4 கோடி லாபம்

கோழிக்கோடு, ஜுலை 17-

       பொதுத்துறை நிறுவனமான ‘கேரளா சோப்ஸ்’ கடந்த நிதியாண் டில் ரூ. 1.4 கோடி நிகர லாபம் ஈட்டி யுள்ளது.  

       தயாரிப்பு முறை மற்றும் சந்தைப்  படுத்தல் முறைகள், பொதுத்துறை நிறுவனத்திற்கு அதிக லாபத்தை அளித்துள்ளதாக கேரளா சோப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

       2022-23ம்  நிதியாண்டில், 717 மில்லி யன் டன் சோப்பு பொருட்கள் வெளி நாட்டு - உள்நாட்டு சந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மற்ற மாநி லங்களில் மட்டும் ரூ. 10 கோடி மதிப்  புள்ள சோப்பு பொருட்கள் விற்பனை யாகி உள்ளன. 2021-22இல் ஈட்டிய ரூ.  25 லட்சம் லாபம் தற்போது நான்கு  மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பு நிதி யாண்டின் மூன்று மாதங்களுக்குள் ரூ.41 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.  

     பலதரப்பட்ட தரமான பொருட் களுடன், சமூக வலைதள விளம்ப ரங்கள் மூலமாக சந்தை வலுப்படுத் தப்பட்டுள்ளது. கேரளா சோப்ஸ் திரவ சோப்புகள் உட்பட 17 தயா ரிப்புகளை கொண்டுள்ளது.  

      தமிழகம் தவிர மற்ற மாநிலங்க ளில் உள்ள அனைத்து போலீஸ் கேன்  டீன்களிலும் கேரள சோப்புகள் கிடைக்கும். கேரளா சாண்டல் சோப்  புக்கு அதிக தேவை உள்ளது.

     ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார்,  ஓமன், குவைத் மற்றும் சவூதி அரே பியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி விரைவில் நடைபெறவுள்ளது.

     எல்டிஎப் அரசின் தொடர் தலையீடு கள்தான் இந்த சாதனைக்கு காரண மாக உள்ளது.  உடலை சுத்தப்படுத்தும் ஷவர்  ஜெல், பிரீமியம் சந்தன மஞ்சள்  சோப்பு மற்றும் ஃபேஸ் வாஷ்  போன்ற புதிய தயாரிப்புகளும் விரை வில் கிடைக்கும். ஓட்டல்களுக்கான சிறிய சோப்புகளும் தயாரித்து வழங்கப்படும்.  

     நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் அதிக உற்பத்தி செய்யும் திறன்  கொண்ட இரண்டு நவீன இயந்தி ரங்களும் வந்துள்ளன. கை கழுவு தல், பாத்திரம் கழுவுதல், தரையை சுத்தம் செய்யும் திரவம் மற்றும்  திரவ வடிவிலான சோப்புகளும் சோதனை அடிப்படையில் சந் தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.