காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில், மூத்தத் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் திரிபாதியின் மனு உரிய முறை யில் பூர்த்தி செய்யாததால், சனிக்கிழமையன்று தள்ளுபடி யானது. இதையடுத்து, மல்லிகார்ஜூன கார்கே -சசிதரூர் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்