districts

பாலியல் வன்கொடுமை செய்த உதவிஆய்வாளர் கைது

சென்னை,ஜன.14-  சென்னை கோவிலம்பாக்கம் பகுதி சுசிலா நகரை சேர்ந்த 37 வயதுடைய பெண் கடந்த ஆண்டு ஜனவரி 4-ந் தேதி பள்ளிக் கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதில் 2021-ம் ஆண்டு ஓர் மரம் நடும் விழாவில் புனித தோமையார் மலை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள ஆண்ட்ரூஸ் கார்டுவெல் (வயது 54) என்பவரை சந்தித்ததாகவும், அந்த நேரம் தன் தாயார் இறந்த மன அழுத்தத்தில் இருந்தபோது ஆண்ட்ரூஸ் கார்டுவெல் ஆறுதலாக பேசி தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியதாகவும், அதே நேரத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப் பட்டு விசாரணை நடத்தியபோது ஆண்ட்ரூஸ் கார்டுவெல் தலைமறை வானார். தலைமறைவான அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் காவல் ஆணையர்  அமல்ராஜிடம் புகார் அளிக்கப்பட்டது. கொல்கத்தாவில் தலை மறைவாக இருந்த அவரை கைது செய்து விமானம் மூலம் தாம்பரம் கொண்டு வந்து சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.