கிருஷ்ணகிரி,நவ.16- ஓராண்டுக்கு முன்பு ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் நகரின் மையப் பகுதியில் சாந்தி நகர் ஜான் போஸ்கோ பள்ளி ஒட்டி கழிவு நீர் கால்வாய், மின் கம்பம் இடிந்து விழுந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட கல் மண் சாலையின் பள்ளிக்கூடம் முன்பு சாலை மீது போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. இவற்றை அகற்ற வேண்டும்,கழிவு நீர் கால்வாயை சீர்படுத்த வேண்டும் என்று இரு முறை மனு கொடுக்கப்பட்டு பலமுறை போராட்டங்களும் நடத்தப்பட்டது. இதுகுறித்த விரிவான செய்தி தீக்கதிரில் வெளியிடப்பட்டது. தீக்கதிர் செய்தி எதிரொலியாக தற்போது கல் மண் அப்புறப்படுத்தப் பட்டு கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.