சென்னை, செப். 22- வடசென்னை பகுதியில் பழுதடைந்த குழாய்களால் குடி நீரில் கழிவு நீர் கலப்பு அதிகரித் துள்ளது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தர மான குடிநீர் வழங்க வேண்டும்: வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு வலிறுத்தியுள்ளது. இதுகுறித்து வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம், செயலாளர் ஆர்.ஜெய ராமன், பொருளாளர் ஆர்.பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகி கள் சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநரை சந்தித்து மனு அளித்தனர். அதில் கழிவுநீர் கலக்கும் நகர்களில் உள்ள குடிநீர் குழாய்களை புதி தாக மாற்றி அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை புதிதாக அமைக் கப்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் எடுக்க கேட்கப்படும் வைப்புத்தொகை மற்றும் உள்கட்டமைப்பு கட்டணத் தொகையை தவணை முறையில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நீண்ட காலத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களும், கழிவுநீர் குழாய் களும் பழுதடைந்துள்ளதால் கசிவுகள் ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து விடுகிறது. எனவே சேத மடைந்த குழாய்களை உடனடி யாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப குழாய்கள் பாதாள சாக்கடையின் மேன்ஹோல்கள் பல பகுதிகளில் சேதமடைந்திருக்கிறது. மேலும் பழைய குழாய்களின் அளவும் சிறியதாக உள்ளது. எனவே தற்போதைய மக்கள் தொகைக்கு, குடியிருப்புகளுக்கு ஏற்ப புதிதாக பெரிய குழாய்களும், தொட்டி களும் அமைக்க வேண்டும் பாதாள சாக்கடை குழாய்களுக்கும், குடிநீர் குழாய்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்குமாறு அமைக்க வேண்டும்.
மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள்
பழைய மாநகராட்சி பகுதியில் தினசரி ஒரு மணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் புதி தாக இணைக்கப்பட்ட திரு வொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒருநாள் அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படு கிறது. மீஞ்சூர் கடல்நீரை குடி நீராக்கும் ஆலை செயல்பாட்டில், பராமரிப்பில் பிரச்சனை உள்ள தால் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதாக ஸ்தல மட்ட அதிகாரி கள் கூறுகிறார்கள். குறிப்பாக திருவொற்றியூர் மேற்கு பகுதி யில் மேல்நிலை தொட்டி திட்ட மிட்டப்படி கட்டவில்லை. இதனால் தண்ணீர் மேல்நிலை தொட்டிக்கு உயர்த்தாமல் நேரடியாக வழங்கு வதால் மேடான பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, திருவொற்றியூர் மேற்கு பகுதியில் மேல்நிலை தொட்டி கட்டுவதை உறுதிப்படுத்த வேண்டும். திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், மாதவரம் பகுதிகளில் தினசரி குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை அமைக்கப்படாத அனைத்து பகுதி களிலும் அமைக்க வேண்டும்.
ஊழியர்கள் பற்றாக்குறை
சென்னை குடிநீர் வாரியத்தில் உதவி பொறியாளர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை ஆட்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. ஒரு வட்டத்திற்கு ஒரு உதவி பொறியாளர் இருந்து சேவை வழங்க வேண்டிய இடத்தில், ஒரு உதவி பொறியாளர் 2 அல்லது 3 வார்டுகளை கவனிக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் மக்க ளுக்கு விரைவான சேவைகளை வழங்குவதில் பெரும் பின்னடைவு உள்ளது. மக்களுக்கு விரைவான சேவையை வழங்க வார்டுக்கு ஒரு உதவி பொறியாளர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் கடைநிலை ஊழி யர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தி குறைந்தபட்ச ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குடிநீர் இணைப்பு கட்டணத்தை குறைத்திடுக புதிய குடியிருப்புகளில் இணைப்பு கட்டணம், வைப்புத் தொகை, உள்கட்டமைப்பு வரி, சாலை கட்டிங் கட்டணம் என ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு லட்சத்திற்கும் மேல் செலுத்த வேண்டியுள்ளதால், பலரால் இணைப்பு எடுக்க முடியவில்லை. குறிப்பாக சாலை கட்டிங் கட்டணம் ஒரு மீட்டருக்கு சுமார். ரூ. 5,500 வசூலிக்கப்படுகிறது. இரு மேன் ஹோல்களுக்கு இடைப்பட்ட தூரம் 30 மீட்டர். இடையில் இருக்கும் குடியிருப்பு எந்த மேன்ஹோலில் இணைப்பு கொடுத்தாலும் 15 மீட்டர் வரும். அப்படியென்றால் ரோட்கட்டிங் மட்டுமே 82,500 ரூபாய். பிற கட்டணங்களையும், சேர்ந்தால் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை சாதாரண மக்கள் ஒரே முறையில் செலுத்த இயலாததால் பலர் இணைப்பு எடுக்காமல் உள்ளனர். எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும். அதுவரை தவணை முறையில் செலுத்த வாய்ப்பளித்து அனை வருக்கும் குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்குவதை உறுதிப் படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதில் துணைப் பொதுச் செய லாளர்கள் பி.ஆர்.அஜய் குமார், கே.நம்மாழ்வார், சட்டத்துறை செயலாளர் பி.அருண்குமார், நிர்வாகிகள் எஸ்.ஏ.வெற்றி ராஜன், சி.சடகோபன், சி.சேகர், வி.அருண் பாபு, யு.அறிவழகன், எல்.ராஜரத்தினம், என்.கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.