districts

img

சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் சீரமைக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூலை 1-

      திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை செல்லாத்தூர் காலனியில், கால் நூற்றாண்டு காலமாக, கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுவதை தடுக்க, கழிவுநீர் கால்வாய் அமைக்க  வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளி யன்று (ஜூன் 30), ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    ஆதிதிராவிடர் மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் கழிவுநீர் வெளியேற இட வசதி இல்லை.  கழிவு நீர் வடிகாலும்  அமைக்கப் படவில்லை. பலமுறை வலியுறுத்தியும் ஊராட்சி  நிர்வாகம் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.இதனால்  கடந்த 25 ஆண்டு களாக வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகி றது. கழிவுநீர்  கால்வாய் அமைகாததால் திறந்த வெளி சாக்கடையாக மாறி கொசு பண்ணை உரு வாகி உள்ளது.

    இதனை உள்ளாட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. இந்த நிலையில் செல்லாத்தூர் காலனியில் தேங்கும் கழிவுநீரை குடங் கள் மூலம் கொண்டு வந்து ஆர்.கே.பேட்டை பிடிஒ அலுவலகத்தில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் ஊற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. செல்லாத்தூர் காலனி யில் பெரியார் தெருவில் சிமெண்ட் சாலை, குடிநீர் குழாய்கள் அமைத்து தர வேண்டும்,

     எஸ்.பி.கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதியில் தெருவிளக்குகள் உட்பட்ட அடிப்படை வசதிகள் செய்து  தர வேண்டும்,  கோபாலபுரம்  பழங்குடி கிராமத்திற்கு சாலை, தெரு மின்விளக்கு அமைத்து தரவேண்டும், அம்மனேரி செல்லும்  வழியிலும், அம்மனேரியி லிருந்து ஏரிக்கரை செல்லும் வழிலும் ஆபத்தாக உள்ள திறந்தவெளி கிணறுகளுக்கு தடுப்பு சுவர் அமைத்து தரவேண்டும், மடுவூர் செல்லும் பாதையில் ஆற்று  மேம்பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும், ஆதிவராகபுரம் செல்லும்  பாதையில் போக்கு வரத்துக்கு இடையூராக உள்ள குப்பைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும்,  ஆனந்தவள்ளிபுரம் பழங்குடி கிராமத்தில் வாழ்பவர்களுக்கு புதிய தாக தெரு அமைத்து  தர வேண்டடும் என வலியுறுத்தப்பட்டது.  

    ஆர்.கே.பேட்டை பிடிஒ  அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டச் செய லாளர் ஏ.சிவபிரசாத் தலைமை தாங்கினார்.இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், சி.பெருமாள், வட்டக் குழு உறுப்பினர்கள் கே.ஜி.கணேசன், ஜெயசந்திரன், குப்பன், வஜ்ஜரவேல், வித்யா, செல்வம், லோக நாதன், வினாயகம்,  ராஜேந் திரபிரசாத்,  உள்பட பலர்  பேசினர்.பின்னர் கோரிக்கை கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.