விழுப்புரம், ஜூன்.11-
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நீதி மன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 147 வழக்குகளுக்கு ரூ.4.75 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய அளவி லான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மாவட்ட தலைவரு மான பூர்ணிமா தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி ஜெயப்பிரகாஷ், முதுநிலை சார்பு நீதிபதி பஷீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாடு சம்பந்தப்பட்ட வழக்கு கள், நுகர்வோர் தொடர்பான வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசமாக விசாரிக்கப்பட்டது.
அதுபோல் ஏற்கெனவே நிலுவையிலுள்ள இருந்த வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் நீதிபதிகள் வெங்கடேசன், ராஜ சிம்மவர்மன், சுபத்ரா, தமிழ்செல்வன் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், வக்கீல்கள் தனராஜன், வேலவன், ராஜகுமாரன், சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர். இம்முகாமில் 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன் முடிவில் 147 வழக்கு கள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.4 கோடியே 86 லட்சத்து 36 ஆயிரத்து 947-க்கு தீர்வு காணப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.