சென்னை,செப்.6- சென்னையில் இன்றும் 3 நாட்களில் டெங்குமரபணு பகுப்பாய்வகம் தொடங்கப் படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து த்துறை இயக்ககத்தில் உள்ள மாநில பொது சுகாதாரஆய்வகத்தில் 3 நாட்களில் செயல்பாட்டிற்கு வரவுள்ள டெங்கு மரபணு பகுப்பாய்வகத்தை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய டெங்கு வைரஸ் கண்டறிந்து, நோய் பாதிப்புகளை குறைத்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தும் வகையில் டெங்கு மரபணு ஆராய்ச்சியில் பயன்படுத்த ஏதுவாக அதற்குறிய வேதி பொருட்களை இறக்குமதி செய்யப்பட்டு, இன்னும் 3 நாட்களில் டெங்கு வைரஸ் மரபணு ஆய்வு தொடங்கப்படவுள்ளது. டெங்கு குறித்து ஆய்வு செய்ய ஏராளமான ஆய்வகங்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருந்தாலும், அதன் வீரியம் குறித்து ஆய்வு இந்தியாவில் எந்த அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் இல்லை. முதன்முறையாக தமிழ்நாட்டில் முதலமைச் சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, டெங்கு வின் வீரியம் குறித்து மரபணு பகுப்பாய்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2012 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்புகளினால் 66 பேரும், 2017 இல் 65 பேரும் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 80 நாடுகளில் வீரிய மிக்க டெங்கு பரவி அச்சுறுத்தல் ஏற்படுத்தி யுள்ளது. எனவே டெங்குவின் வீரியம் குறித்து ஆய்வு செய்வது அவசியமான ஒன்றாகும். இதற்காக மரபணு பகுப்பாய்வு கூடம் பயன்படுத்தப்படவுள்ளது என்றார். ஆய்வின் போது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை கூடுதல் இயக்குநர் மருத்துவர் சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.