districts

செஞ்சி கோட்டை சுற்றுலா தளமாக விரைவில் மாறும்: அமைச்சர்

செஞ்சி,ஜன.8- செஞ்சிக்கோட்டை விரைவில் சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையின் பாரம் பரியத்தை உணர்த்தும் மரபு நடை விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சகாய் மீனா முன்னிலை வகித்தார்.  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசுகையில்,“ தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே சுற்றுலா மரபு நடை விழா நடத்தப்படுகிறது. இந்த விழா ஜன.14 வரைக்கும்  நடை பெறுகிறது. சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி பார்க்கலாம். புகைப்படங்கள் எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தால், நிறைவு விழாவில் சிறந்த 100 புகைப்படங்கள் தேர்வு செய்து பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்” என்றார். செஞ்சிக்கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதலமைச்சருக்கு பரிந்துரைக்கப் பட்டு, ஒன்றிய அரசின் அனு மதிக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. விரைவில் செஞ்சிக் கோட்டை சுற்றுலா தலமாக அறி விக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த விழாவில் பள்ளி மாண வர்களின் பரதநாட்டியம், சிலம்பம், மல்லர் கம்பம், மல்லர் கயிறு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.  முன்னதாக, மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் சாரண இயக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு செஞ்சிக்கோட்டையின் உச்சிக்கு சென்று வந்தனர்.