districts

மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஜூன் 10-

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் கக்கதாசம் வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் அன்னியாளம் அருகே வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை மடக்கி சோதனை செய்த போது, அனுமதியின்றி மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது.

   இதையடுத்து எலக்ட்ரானிக் சிட்டி சீனிவாஸ், தேன்கனிக்கோட்டை திம்மனட்டி சக்திவேல், கோணசந்திரம் வெங்கட்ராஜ், அஞ்செட்டி செல்வமணி, அத்திப்பள்ளி மந்து குமார் யாதவ், சுசீல்சிங் ஆகிய 6 பேரை கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் குருபரப்பள்ளி, அட்கோ, பாகலூர், கெலமங்கலம் பகுதி களில் மணல் கடத்திய 8 லாரிகளை அதி காரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.