districts

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

அரக்கோணம், ஜூன் 4- அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் பகுதியில் மண் கடத்தப்படு வதாக அரக்கோணம் வட்டாட்சியர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது தலைமையில் வரு வாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மண் ஏற்றி வந்தவர்கள் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். இதை யடுத்து வட்டாட்சியர் டிராக்டரை பறி முதல் செய்து அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.