சென்னை, மார்ச் 10 - பொதுப்போக்கு வரத்தை பாதுகாக்க கோரி வெள்ளியன்று (மார்ச் 10) சென்னையில் போக்கு வரத்து ஊழியர்கள் இரு சக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழகங்க ளில் போதுமான எண்ணிக் கையில் பேருந்துகளை இயக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கழகங்களில் ஏற்படும் வரவுக்கும் செல வுக்கும் இடையே உள்ள பற்றாக்குறையை, நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி ஈடுகட்ட வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளன்றே பணப் பலன்களை வழங்க வேண் டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், ஒப்பந்தப்படி ஓய்வூதியத்தை முறைப் படுத்த வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி பிப். 26 முதல் மார்ச் 13 வரை இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட தாம்பரம் பணிமனையில் தொடங்கிய பிரச்சாரத்தை சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொதுச்செயலாளர் வி.தயானந்தம், நிர்வாகிகள் வி.சசிக்குமார், என்.சிவா, ஜி.செந்தில்குமார், எஸ். இளங்கோவன் தலைமை யிலான இந்த பிரச்சாரக் குழு, குரோம்பேட்டை 1, 2, குன்றத்தூர், பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல், வடபழனி, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம், மாதவரம், பெரம்பூர் ஆகிய 13 பணி மனைகளில் பிரச்சாரம் செய்தது. இதனைத்தொடர்ந்து மார்ச் 11, 12 தேதிகளில் அடுத் தடுத்த குழுக்கள் பணிமனை கள்தோறும் பிரச்சாரம் செய்ய உள்ளன.