சென்னை, ஏப். 18 - நொச்சிக்குப்பத்தில் விரிவடைந்த குடும்பங்க ளுக்காக கட்டப்படும் வீடு களை, அந்த பகுதியின ருக்கே வழங்க வலியுறுத்தி திங்களன்று (ஏப்.18) அப்பகுதி மக்கள் உண்ணா நிலை போராட்டம் நடத்தி னர். நொச்சிக்குப்பத்தில் விரிவடைந்த குடும்பங்க ளுக்காக தமிழ்நாடு நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 1188 (11 பிளாக்) வீடுகள் அதே பகுதியில் கட்டப்படுகிறது. இதில் பாதி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அண்மையில் டுமீங் குப்பத்தில் அடுக்குமாடி குடி யிருப்பு இடிந்து விழுந்தது. இதனையடுத்து அங்கிருந்த 216 குடும்பங்கள், நொச்சிக் குப்பம் விரிவடைந்த குடும் பங்களுக்காக கட்டப்படும் குடியிருப்பில் குடியமர்த்தப் பட்டனர். நொச்சிக்குப்பத்தில் உள்ள 136 குடும்பங்கள் ஒதுக்கீடு கிடைக்காமல் பல வருடமாக வாடகை வீடுக ளில் தங்கி உள்ளனர். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் இவர்களுக்கு ஒதுக்கீடு தராமல், டுமீங் குப்பம் மக்க ளுக்கு மட்டும் ஒதுக்கீடு கொடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் அதி ருப்தி அடைந்தனர். விரிவடைந்த குடும்பங்க ளுக்கு பங்களிப்பு தொகை யாக 1.30லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 5.50லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், விரி வடைந்த குடும்பங்களுக் காக கட்டப்படும் வீடுகளை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும். டுமீங் குப்பத்தில் கட்டப்படும் வீடுகளில் 216 வீடுகளை நொச்சி குப்பம் மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை 1.30 லட்சத்திற்கு மேல் உயர்த்தக் கூடாது என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடை பெற்றது. மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை மற்றும் நொச்சிக்குப்பம், நொச்சி நகர் மக்கள் சார்பில் இந்த காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.