சென்னை,ஜன.17- காணும் பொங்கல் கொண்டாட் டத்தால் செவ்வாயன்று சென்னை களை கட்டியது. மெரினா கடற்கரையில் காலை யிலிருந்தே மக்கள் கூட தொடங்கி னர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. பிற்பகலில் கட்டுக் கடங்காத வகையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் திரும்பிய திசையெல்லாம் மக்கள் தலை களாகவே காட்சி அளித்தது. மெரினா கடற்கரையில் கூட்ட நெரிசலால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடை பெற்று விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மெரினாவில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்ததால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. 15 இடங்களில் அமைக்கப்பட்டி ருந்த கண்காணிப்பு கோபுரங்களி லும் தலா 3 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலில் இறங்கி மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் நன்கு நீச்சல் தெரிந்த 140 வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். சிறுவர் -சிறுமிகள் காணாமல் போனால் கண்டுபிடிக்க வசதியாக அவர்களின் கைகளில் காவலர் பாதுகாப்பு வளையம் கட்டி விடப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த உதவி எண்கள் மூலமாக மாயமான குழந்தைகள் உடனுக்குடன் மீட்கப்பட்டன. தற்கா லிக உதவி மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.
கிண்டியில் சிறுவர் பூங்கா விலும் காலையில் இருந்தே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்குள்ள பாம்பு பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விதவித மான பாம்புகள் மற்றும் முதலை பண்ணையில் உள்ள முதலைகள் ஆகியவற்றையும் மக்கள் கண்டு களித்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் காலை 8 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட் டனர். பிற்பகலில் யானை குளிய லுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2 மணியளவில் இருந்து 4 மணி வரையில் யானைகள் குளிப்பதை யும் பார்வையாளர்கள் கண்டு ரசி த்தனர். 2 பெரிய திரைகளில் பூங்காவின் செயல்பாடுகள் பற்றி விவரிக்கப்பட்டது. அவசர சிகிச்கைக்காக 5 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. 9 இடங்களில் மருத்துவ உதவி மையங்களில் அமைக்கப் பட்டிருந்தன. 3 இடங்களில் கண் காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொது மக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. எலியட்ஸ் கடற்கரையில் சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை நேரங்களில் அங்கு அமைக்கப்பட்டு உள்ள மேடையில் கலைஞர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ள்ளன. பொதுமக்களை பெரிதும் கவர்ந்து உள்ள இந்த யானை சிற்பங்கள் அருகில் நின்று போட் டோக்களை எடுப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். அதன் அருகில் நின்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்பி மற்றும் போட்டோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.