districts

விழுப்புரம் அருகே துர்நாற்றம் வீசக்கூடிய தனியார் நிறுவனத்திற்கு சீல் வைப்பு

விழுப்புரம், ஏப். 21- விழுப்புரம் அருகே வேடம்பட்டு என்ற கிராமத்தில் இயங்கி வந்த மாற்று எரிசக்தி தனியார் நிறுவனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்,22)  அதிகாரிகள் சீல் வைத்த னர். விழுப்புரம் அருகே வேடம்பட்டு கிராமத்தில் கடந்த சுமார் ஆறு ஆண்டு களாக மருத்துவக் கழிவு கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை பவுடராக்கி நிலக்கரிக்கு பதிலாக மாற்று எரிசக்தி பவுடராக தயாரிக்கும் தனி யார் நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் இந்நிறு வனத்தில் இருந்து வரும் துர்நாற்றம் வீசக்கூடிய நச்சு காற்றால் தாங்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி அந்த தனியார் நிறு வனத்தை மூட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.  மேலும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக முடிவு செய்தனர், இந்நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தனியார் நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் அடிப் படையில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்தது, இந்நிலையில் திடீரென அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 28க்கும் மேற்பட்டோர் நச்சுக் காற்றால் வாந்தி மற்றும் உடல் பாதிப்பு ஏற்பட்டு விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞாயிற்றுக் கிழமை சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்நிலையில் மாவட்ட நிர்வாக ஆட்சியர் நடவடிக்கையின் பேரில் அந்த தனியார் நிறுவனத்தை ஞாயிற்றுக்கிழமை  (ஏப்.21)சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்காலிகமாக மூடி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.