கிருஷ்ணகிரி,ஏப். 16- ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாண வர்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கில், சுகாதாரமான குடிநீர் சுத்திகரிப்பு ஆர்.ஒ எந்திரத்தை வழங்கி வருகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் இயங்கி வரும் லிட்டில் பிளவர் சிறுவர் இல்லத்தில் தங்கி பயிலும் பெற்றோரை இழந்த மற்றும் சிதைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2,16,957 மதிப்பிலான சுத்திகரிப்பு எந்திரமும், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.2,66,253 மதிப்பிலான சுத்திகரிப்பு எந்திரம் என மொத்தம் ரூ.4.83 லட்சம் மதிப்பிலான சுத்திகரிப்பு எந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.