ராணிப்பேட்டை,ஏப்.21- சோளிங்கர் ஊராட்சி ஒன்றியப் பகுதி களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் 4.90 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி பார்வையிட்டார். சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் கொடைக்கல் ஊராட்சி கள்ளான்குப்பம் தொடக்கப்பள்ளி, கொடைக்கல் பெருங் காஞ்சி தொடக்கப்பள்ளி, கள்ளான்குப்பம் தொடக்கப்பள்ளியில் சமையலறை, நூலக கட்டிடம் பழுதுபார்த்தல், மாணவர்க ளுக்கான கழிப்பறை,பெருங்காஞ்சி தொடக்கப்பள்ளியில் பெண்களுக்கான கழிப்பறை, கொடைக்கல் மோட்டூர் பகுதியில் திரௌபதி அம்மன் குளம் தூர்வாரும் பணிகள், சோமசமுத்திரம் ஊராட்சியில் கல்பட்டுஅரசு தொடக்கப் பள்ளி, பரவத்தூர் ஊராட்சியில் சின்னப்பரவு புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில்இரண்டு வகுப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடம் பரவத்தூர் ஊராட்சி அருந்ததிபாளையம் கிராமத்தில் 16 பயனாளிகள் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள்கட்டப்பட்டு பணிகள் ஆய்வு செய்து, நேரடியாக பயனாளிகளை கேட்டறிந்தார். தொடர்ந்து ஐப்பேடு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில்ரூ.9.04 லட்சம் மற்றும் ரூ.9.45 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு குட்டை களைஅகலப்படுத்தியும், ஆழப்படுத்தியும் குளம் கட்டமைப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டுவருகிறது. ஆகவே அப்பணிகளை நாள்தோறும் கண்காணித்து மே 25 ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்கும்வகையில் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார். மேலும்பணிகளை வேகமாக செய்யும் பொழுது பணிகள் தரமற்றதாக இருக்கக் கூடாது. பணிகள் உரிய தரத்தில் கட்டுப்படுகிறதா என்பதை பொறியாளர்கள் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டுமென ஆட்சியர் ச.வளர்மதி உத்தரவிட்டார்.