விழுப்புரம், மார்ச் 4- விழுப்புரம் மாவட் டத்தில் படித்தது வேலை வாய்ப்பில்லாத இளை ஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பழனி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய அலுவலகத்தில் 1.1.2023 அன்று தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத் திறனாளி கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளை ஞர்களிடமிருந்து வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை தொடர்ந்து புதுப்பித்து 31.12.2022 அன்று 5 ஆண்டுகள் நிறைவடைந்து, வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்க ளுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்தி ருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவித்தொகை வழங்கப் படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். 1.1.2023 உடன் தொடங்கும் காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப் பங்களை மனுதாரர்கள் வருகிற மார்ச் 10 வரை அனைத்து அலு வலக வேலை நாட்களிலும் சமர்பிக்கலாம்.