districts

img

சம்பா சாகுபடிக்கு உர தட்டுப்பாடு

கடலூர்,ஜூலை 27- கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும்  விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் ஏழுமலை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் தங்கள் கோரிக் கைகள் குறித்து பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்  பி.கற்பனைச் செல்வம்: கடந்த  சில நாட்களாக பெய்த மழையால் பரங்கிப் பேட்டை ஒன்றியம் வடக்கு பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, கிள்ளை தெற்கு, கிள்ளை  வடக்கு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டி ருந்த மணிலா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன்: குறுவை நெற்பயிரில் அதிகரித்துள்ள மஞ்சள் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை தொகை வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு உரம், யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகியவை கூட்டுறவு வங்கிகளில் ஏற்பட்டுள்ள தட்டுப் பாட்டை போக்க வேண்டும். திட்டக்குடியில் காட்டுப்பன்றிகளால் விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். பண்ருட்டி தேவநாதன்: பண்ருட்டியில் உள்ள மூன்று ஏரிகளையும் தூர்வார வேண்டும். ஆர்.கே.சரவணன்: குறிஞ்சிப்பாடி வட்டத்தில் விவசாயிகளின் பாசன ஆதாரம்  பெருமாள் ஏரி தூர்வாரப்பட்டு முழுமை அடையாமல் தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பெருமாள் ஏரி பகுதியை விடுமுறை கால சுற்றுலா தலமாக  மாற்றி அமைக்க வேண்டும். ஆட்சியர்: விவசாயிகள் கோரிக்கை களை உரிய முறையில் விசாரணை செய்து விவசாயிகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.