districts

சாத்துக்குடி விலை அதிகரிப்பு

சென்னை, மே 18- கோயம்பேடு பழச்சந்தைக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து  வியாழன்று 20 லாரிகளில் சுமார் 160 டன் சாத்துக்குடி பழங்கள் வந்தன. கோடைவெயில் தாக்கம் அதிகம் காரணமாக  சாத்துக்குடி பழங்கள் தேவை வழக்கத்தைவிட அதிகரித் துள்ளதால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. வியாழனன்று  மொத்த விற்பனையில் ஒரு கிலோ சாத்துக் குடி ரூ50-க்கு விற்கப்பட்டது. வெளிச்சந்தையில் சாத்துக்குடி  ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.