districts

img

சானமாவு தலித் குடும்பங்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க சாராட்சியர் உறுதி

கிருஷ்ணகிரி,செப்.13- நீதிமன்ற உத்தரவுப்படி சானமாவு தலித் குடும்பங்களுக்கு நிலத்தை அளந்து கொடுப்பதாக சாராட்சியர் உறுதியளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1997-98 ஆம் ஆண்டில் சர்வே எண் 12/2 இல் 1.028 ஹெக்டேர் நிலம் தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்டு சூள கிரி வட்டம், சானமாவு கிராமத்தில் 41 தலித் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலத்தை ஆதிதிராவிட மக்கள் அனுபவிக்க விடக்கூடாது என்பதற்காக சிலர் வழக்கு தொடுத்த னர். அத்துடன் இந்த நிலத்தை அப கரிக்க முறைகேடான முறையில் சில அரசு அதிகாரிகள் துணையுடன் முயற்சி செய்து பத்திர பதிவு செய்ய வும் அடியாட்களை கொண்டு அடா வடி செய்து வந்தனர். நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்தவர்கள் மற்றும் வழக்கு தொடர்ந்தவர்கள் குறித்து தமிழ்நாடு அரசு, ஆதி திராவிட நலத்துறையும் கண்டுக்கொள்ளவில்லை. அந்த நிலத்தில் வைத்திருந்த பெயர் பலகைகளை அப்புறப்படுத்தியது.  இந்த நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கட்சியும் சானமாவு தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை ஆதி திராவிட நலத்துறை உரியவர்களிடம் ஒப்படைப்பு செய்ய வேண்டும் என்று சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சான மாவு ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட 41 பட்டாக்களுக்கும் நிலத்தை எடுத்து அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலை யில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் தலைமையில் மாவட்ட தலைவர் ஆனந்தகுமார்,செயலாளர் நாகேஷ் பாபு, துணைத் தலை வர்கள் இருதயராஜ்,முத்து, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் ஜி.கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சுரேஷ், மாநகரச் செயலாளர் சி.பி.ஜெய ராமன், ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி,சானமாவு ஆனந்தன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஓசூர் சாராட்சியர் சரண்யாவை புதனன்று (செப்.13) சந்தித்தனர்.  அப்போது, நீதிமன்ற உத்தரவுபடி, பட்டாகளுக்கு உரிய இடத்தை  41 தலித் குடும்பங்களுக்கு பிரித்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். நீதிமன்ற உத்தரவு மற்றும் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட சாராட்சியர், 41 பட்டாக்க ளுக்கும் உரிமையாளர்கள் தங்களது ஆதார் அட்டை, பெயர் பட்டியல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நில அளவையர், வட்டாட்சியரிடம் உடன டியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஒரிரு நாட்களில் நேரில் வந்து அளவீடு செய்து வழங்குவதாக உறுதியளித்தார்.