கள்ளக்குறிச்சி, அக்.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கராபுரம் 15வது ஒன்றிய மாநாடு என்.சங்கரய்யா நினை வரங்கத்தில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ச.சசிகுமார் தலைமை வகித்தார். கட்சியின் செங்கொடியை கே.சுந்த ரம் ஏற்றி வைத்தார்.பி.முரளி வரவேற்றார். கோ.மணி மாறன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளர் எஸ்.சிவாஜி, வரவு - செலவு அறிக்கையை ஆர். பச்சையப்பன் ஆகியோர் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயலாளர் டி. எம்.ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எ.வி.ஸ்டாலின் மணி வாழ்த்திப் பேசினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே.பழனி முடித்து வைத்தார். புதிய ஒன்றியக்குழு 13 பேர் கொண்ட ஒன்றியக்குழுவின் செயலாளராக எஸ்.சிவாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தீர்மானங்கள் சங்கராபுரம் ஒன்றியத்தில் கிடப்பில் போட்ட சிப்காட் தொழிற்பேட்டை உடனடியாக துவக்க வேண்டும், சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த பரிசோதனை ஆய்வகம் மற்றும் போதுமான மருத்து வர்களை மற்றும் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும், சங்கராபுரத்தில் அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.