சென்னை, மார்ச்- முன்னணி செல்பேசி உற்பத்தியாளரான சாம்சங், கேலக்சி ஏ 54 மற்றும் ஏ34 ஆகிய 5ஜி அலைவரிசை யில் இயங்கும் இரண்டு செல்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் இதனை அறிமுகம் செய்து செய்தி யாளர்களிடம் பேசிய சாம்சங் இந்தியாவின் மொபைல் வர்த்த்க பொது மேலாளர் அக்ஷய் குப்தா நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய வகையில் இவை இரண்டும் வடிவமைக்கப் பட்டுள்ளது என்றார். நீண்ட காலம் செயல்படக்கூடிய பேட்டரி, பொழுதுபோக்கு அம்சங்கள் நுகர்வோருக்கு சிறந்த தேர்வாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். குறைந்த வெளிச்சத்தில் கூர்மையான படங்களையும் வீடியோக்களையும் எடுக்க இது உதவும் என்றும் அவர் கூறினார். இவற்றில் உள்ள கேமரா 12எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 50எம்பி ஓஐஎஸ் முதன்மை லென்ஸைக் கொண்டுள் ளது. இரண்டு சாதனங்க ளிலும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளது. கேலக்சி ஏ54 விலை ரூ.38,999. கேலக்சி ஏ34 விலை ரூ.30,999 ஆகும்.