மாமேதை காரல் மார்க்சின் 205வது பிறந்தநாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் செங்கொடியேற்றி, அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டம், ஆலந்தூர் பகுதி, நங்கநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மக்களுக்கு மோர் வழங்கினார். சென்னை பெருநகர சுமைப்பணித் தொழிலாளர் சங்கம் சார்பில் மத்தியசென்னை மாவட்டம், துறைமுகம் பகுதி, பாரிமுனை மெட்ரோ ஸ்டேஷன் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.