districts

img

தொடர் மழையால் 100 ஏக்கர் நெற்பயிர் சேதம்

கள்ளக்குறிச்சி, மே 8- தியாகதுருகம் அருகே தொடர் மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்ததை தொடர்ந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பள வில் விவசாயிகள் கரும்பு, நெல், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகு படி செய்தனர். தொடர்ந்து பயிர்களுக்கு உரமிட்டும், களை பறித்தும், கூத்தக்குடி ஏரி பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி பரா மரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தியாகதுருகம் பகுதி யில் பெய்த தொடர் மழை யால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீ ரில் மூழ்கியது. இதனால் நெல்மணி கள் விவசாய நிலங்களில் முளைக்கத் தொடங்கின. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கூத்தக்குடியில் சில விவசாயிகள் சொந்த நிலங்களிலும், பல விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் குத்தகைக்கு பயிர் செய்வது வழக்கம். அதன்படி நடவு செய்தது முதல் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ. 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து பயிரை பரா மரித்து வந்தோம். தற்போது நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடிவில்லை. மேலும் நெல் மணிகளும் முளைத்து விட்டன. இனி அறுவடை செய்தால் அறு வடை கூலிக்குகூட பணம் கிடைக் காது. மேலும் குத்தகைக்கு பயிர் செய்தவர்கள் நிலத்தின் உரிமை யாளருக்கு குத்தகை வழங்கும் நிலை உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவ சாயிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் பாதிகப்பட்ட நெல்பயிர் களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.