விழுப்புரம்,ஜன.30- விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கமும் இணைந்து கோரிக்கை மாநாட்டை நடத்தின. மாநாட்டிற்கு ஆலை மட்ட சங்க தலைவர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆலைமட்ட பொருளாளர் எம்.பழனி அனைவரையும் வர வேற்று பேசினார். விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம், கரும்பு விவசா யிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநில செயலாளர் சு.வேல்மாறன், மாநில துணைத் தலைவர் எஸ்.பலராமன், பெரிய செவலை சர்க்கரை ஆலை செயலாளர் எஸ்.ஜோதி ராமன், மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன், கள்ள க்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் ்மணி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் ்பட்டனர். ஆலை மட்ட தலைவராக எம்.ஆறு முகம், செயலாளராக சு.வேல்மாறன் பொருளா ளராக.எம்.பழனி உள்ளிட்ட புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச விலையை நிர்ணயக்க சட்டமியற்றவேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம். பயிர் இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகையினை உடனே வழங்கிட வேண்டும், உரத்தின் விலை உயர்வு, உற்பத்தி செலவு கூடுதல் காரணமாக 1 டன் கரும்புக்கு ரூ. 5ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு. மாநில அரசு பரிந்துரை விலையினை அறிவித்து வழங்க வேண்டும்,பெட்ரோல், டீசல் எத்தனால் கலப்பு 80: 20 ஆக்கிட அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் பிளாண்ட அமைக்க வேண்டும், யூரியா, பொட்டாஷ் . டிஏபி. காம்பளஸ் உள்ளிட்ட இடு பொருட்களின் கடுமை யான விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,தொடர்ந்து உரத்த்திற்கான மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
மாநாட்டுக்கு முன்னதாக மனம்பூண்டி பேருந்து நிலையம் அருகே மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கக்கோரியும் அரவை செய்யப்பட்ட கரும்பு ஒரு டன்னுக்கு ஊக்கத்தொகையாக ரூ.192.50 பைசா வழங்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் எஸ்.காசிவேல், ஆர்.விஜய்குமார், இ.சதீஷ், எம்.கணேசன் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.