districts

img

விழுப்புரத்தில் சாலைப் பணியாளர்கள் போராட்டம்

விழுப்புரம், மார்ச் 10- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தின் 4 மண்டலம் சார்பில் விழுப்புரம் நெடுஞ் சாலை துறை அலுவலகம் முன்பு வெள்ளி யன்று (மார்ச் 10) போராட்டம் நடை பெற்றது. இதில் அனைவரும் பட்டை நாமம் போட்டு வந்தனர். மாநில துணைத் தலைவர் ரவி துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் பழனிச்சாமி, நிர்வாகிகள் வீரமுத்து, எஸ்.சரவணபவன், எம்.சிவகுமார், அரிச்சந்திரன், என்.ராமர், சுப்ரமணியன், கருணாநிதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.   திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலச் செயலாளர் மகாதேவன், தோழமை சங்க நிர்வாகிகள் எஸ்.பார்த்தி பன், ஜே.ராஜா, க.பிரபு, கே.அண்ணாதுரை, பரிதிமால் கலைஞன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.