தமிழக அரசின் சாலை வரி உயர்வை ரத்து செய்ய கோரி வெள்ளியன்று (நவ.24) தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டம் சார்பில் அண்ணா சாலையில் மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், சாலை போக்குவரத்து சம்மேளன மாவட்ட பொதுச் செயலாளர் எம். உதயகுமார், பொருளாளர் ஆர்.முரளி, துணைச் செயலாளர் ஆர்.ராஜ்மோகன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கபாலி உள்ளிட்டோர் பேசினர். இதனை தொடர்ந்து போக்குவரத்து ஆணையர் அ. சண்முகசுந்தரத்திடம் சங்கத் தலைவர்கள் மனு அளித்தனர்.