ஓசூர் மாநகரில் முனீஸ்வர் நகர் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சாலையோர, சிறு கடை, தரைக்கடை, தள்ளுவண்டி, பெட்டிக்கடை, விற்பனையாளர்கள் சங்கம் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் சங்க கொடியேற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் வாசுதேவன், பொருளாளர் ஸ்ரீதரன், கட்டுமான சங்கத் தலைவர் பி.ஜி.மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.