districts

img

சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரம், அக். 2- விழுப்புரம் நகரில்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதிகளில் மழை காலத்தில் முக்கிய சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்குவதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வரு கின்றனர். இந்நிலையில் சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழுப்புரம் நகரில் சாலை களின் இருபுறமும் நெடுஞ் சாலைத்துறை சார்பில் மழைநீர் வடி கால்வாய் அமைக்கும் பணி நடை பெற்று வருகின்றன. இரு புற கால்வாய்களை இணைக்கும் வகையில் சில இடங்களில் சாலையின் குறுக்கே கால்வாய் அமைக்கப்பட்டு வரு கின்றன. இந்த பணிகள் கடந்த ஜூலை 20ஆம் தேதி  தொடங்கப்பட்டது. இதனால் அந்த சாலையில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டன. கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு ஒரு மாதமாகியும் தார் சாலை அமைக்கப்பட ததால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத் துறையினர் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.