districts

img

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக சாலை மறியல்

திருவள்ளூர், ஜூன் 2-

    பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி பரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர், மாதர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது ஒரு சிறுமி உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். ஜனவரி மாதம் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் டெல்லி சாலையில் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தில்லி காவல்துறை கொடூரமாக கையாண்டது. காவல்துறையை கண்டித்தும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக பொன்னேரியில் இந்திய மாணவர் சங்கம்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

   சாலை மறியலில் ஈடு பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  இதில் வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் டி.மதன், மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.டிக்சன், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் இ.மோகனா, செயலாளர் ஏ.பத்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.