districts

img

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

கடலூர், ஜூலை 12 - கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு திருவள்ளுவர் நகர் 8 வது குறுக்கு தெரு வில் முறையாக குடிநீர் வழங்கவில்லை . பல மாத மாக நீடித்து வந்த பிரச்சனை குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளார். ஆனால் கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், கடந்த மாதம் 29 ஆம் தேதி காலி குடங்களுடன் விருத்தா சலம் நகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது பேச்சு  வார்த்தை நடத்திய அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால், விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வட்டாட்சியர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்தார். இதை யடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.