விழுப்புரம்,ஜன.30- திருக்கோவிலூர் ரயில்வே மார்க்கத்தில், திருவண்ணாமலை இருந்து சென்னை வரை சென்று வந்த பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரகண்டநல்லூர் கடைவீதியில் ஜன.30 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பொன், ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு. வேல்மாறன், வட்டச் செயலாளர் எஸ். கணபதி, 12-வது வார்டு கவுன்சிலர் சுகி தமிழ்ச்செல் வன், ப. விருத்தகிரி, ஏ.ஆர்.கே. தமிழ்ச்செல்வன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் வி.உதயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன், எம்.ராமலிங்கம் எம், பழனி, எம்.பார்வதி உள்ளிட்ட பலர் கலந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.