புதுச்சேரி, நவ. 7- புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை மூட வலி யுறுத்தி மக்களை திரட்டி போராட்டம் நடத்த சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சி கள் முடிவு. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ராஜா ங்கம்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சலீம், சிபிஐ எம்.எல்.கட்சியின் செயலாளர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் கூட்டாக வியாழக்கிழமை செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:- புதுச்சேரியில் சிறுமி கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்ச்சி யாக நடைபெற்று வரு கிறது. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு 16 வயது சிறுமி புதுச்சேரியிலிருந்து கடத்தப்பட்டு கூட்டு பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது. புதுச் சேரிக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் சம்பவ மாக பார்க்கிறோம். இதை வன்மையாக கண்டிக்கி றோம். குற்றாவளி்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது புதுச்சேரி அரசின் தவ றான கொள்கை, காவல் துறையின் மெத்தனம், அரசு அதிகாரிகள் அலட்சி யம் போன்ற காரணங்க ளால் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . புதுச்சேரியில் சுற்று லாவை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுப்பது சரியல்ல. போதை கலாசாரத்திற்காக சுற்றுலா பயணிகள் புதுவை வருகிறார்கள் என்பதை அரசே ஊக்குவிக்கும் நிலைமைதான் உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் காவல்துறை யினரோடு சென்று சாலை யோர வியாபாரிகளை துன்புறத்துகிறார்கள். 4 பேர் காரில் தைரியமாக சிறுமியை கடத்தி கொண்டு செல்கிறார்கள். எங்குமே காவல்துறை கண்டுகொள்ளவில்லை. அப்படி என்றால் காவல் துறை தூங்கி கொண்டு இருக்கிறதா? கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சராசரியாக ஆண்டுக்கு 4 ஆயிரம் குற்றங்கள் நடைபெற்று வந்தது. தற்போது சராசரி குற்றங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. ரெஸ்டோ பார்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவில் போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. கோயில்கள், குடி யிருப்புகள் அருகில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசு சுற்றுலா என்ற பெயரில் தடை யற்ற மது விற்பனைக்கு அனுமதி கொடுப்பதும், எவ்வித கட்டுப்பாடும் இன்றி சுற்றுலா பயணி கள் என்ற பெயரில் குற்றச் செயல் நடப்பதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதே இதுபோன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, சிறுமி பாலி யல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது குறிப்பிட்ட கால அளவுக்குள் விசாரணை முடித்து தண்டனை வழங்க வேண்டும். கஞ்சா, போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும். 2021க்கு பிறகு அனுமதிக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை ரத்து செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வலுவான போராட்டத்தை முன்னெடு ப்பது என்று இடதுசாரிகள் முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக தலைமை செயலரை சந்தித்து மேற்கூறிய கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என்று வலி யுறுத்த உள்ளோம். இப்பிரச்னைகளை அரசு தீர்க்கா விட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். செய்தியாளர் சந்திப்பின் போது சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா உள்ளிட்ட இடதுசாரி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.