விழுப்புரம், ஜூன் 11- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் வட்ட மாநாடு காணையில் நடைபெற்றது. வட்டத் தலைவர் எஸ்.ராஜா ராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் என்.ரங்கநாதன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஆர்.ராமமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்தார். வட்டச் செயலாளர் ஏ.நாகராஜன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்டி.முருகன், தலை வர் பி.சிவராமன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் நிறைவுரையாற்றினார். காணையில் சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும். உரங்கள் மற்றும் இடு பொருட்கள் தட்டுப்பாடின்ற கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. வட்டத் தலைவராக எஸ்.ராஜா ராமன், செயலாளராக ஏ.நாகராஜன், பொருளாள ராக என்.ரங்கநாதன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.