districts

img

உடற்பயிற்சி கூடம், நூல் நிலையம் அமைக்கக் கோரி வார்டு சபையில் தீர்மானம்

சென்னை, அக். 15- உடற்பயிற்சி கூடம்,  நூல்நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் 4ஆவது வார்டு பகுதிசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டின் 10ஆவது பகுதி சபை கூட்டம் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமையில் நடை பெற்றது. தினசரி மின்சாரம் தடைபடுவதாலும், குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதாலும் குளிர்சாதனப் பெட்டி,  டீவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. எனவே தொடர்ந்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.பி. நகரில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும், மழைநீர் கால்வாய் அமைத்து சுவிஸ் கேட் அமைக்க வேண்டும், மணலி எக்ஸ்பிரஸ் சாலையில், சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும், ஜோதிநகர், டிகேஎஸ். நகர் பகுதிகளில் சாலையை கடக்க மையத்தடுப்பில் வழி ஏற்படுத்த வேண்டும். சண்முகபுரத்தில் நூலகம் அமைக்க வேண்டும், உடற்பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டும், தூய்மையான குடிநீர் தினசரி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

கழிவு நீர் கால்வாய் அடைப்புகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும், தினசரி கொசு மருந்து அடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும், சேதமடைந்துள்ள தெரு விளக்கு கம்பங்களை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.  மாநகராட்சி உதவி பொறியாளர் கோதண்டராமன், சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், குடிநீர் வடிகால் கழிவுநீர் அகற்றல் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், மாநகராட்சி மின் துறை லைன்மேன் கங்கன் ஆகியோர் பொதுமக்களின் கேள்வி களுக்கு பதிலளித்தனர். பின்னர் பொது மக்கள் முன்வைத்த 13 கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பேசுகையில், இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மாநகராட்சி மாமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், பிற கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்தார். கூட்டத்தில் சண்முகபுரம் நகர் தலை வர் ராமு, செயலாளர் சரவணன், பூம்பு கார் நகர் தலைவர் ராஜசேகரன், செய லாளர் ஜவகர், முன்னாள் தலைவர் முருகப்பன், வி.பி. நகர் செயலாளர் ராம மூர்த்தி, பொருளாளர் விஜயகுமார், வார்டு குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்டையா, வி.பி. நகர் சிபிஎம் கிளைச் செயலாளர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.