திருவள்ளூர், பிப்.23- மின்வாரியத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வெள்ளியன்று (பிப் 23), வடசென்னை அனல்மின் நிலைய நுழைவு வாயில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை தமிழ்நாடு அரசு துண்டு துண்டாக பிரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஏற்கெனவே தமிழ்நாடு மின்சார வாரியம் என்பதை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை உற்பத்தி (அனல்), பசுமை மின்சாரம், மின் விநியோ கம் என மேலும் 3ஆக பிரிக்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது கண்டத்திற்கு உரியது. காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்திர செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தற்போது திடீரென பிரிப்பது தவறான நடைமுறையாகும். மேலும் இத்தகைய நடவடிக்கைகள் வருங்காலங் களில் தனியார் மையத்திற்கு வழி வகுக்கும் எனவும் குற்றம் சாட்டினர். மின்சார வாரியத்தை மேலும் பிரிப்பதால் பொறியா ளர்கள், தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரின் சலுகைகளும், உரிமைகளும் பறிபோகும் அபாயம் உள்ள தால் மின்வாரியத்தை பிரிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார். இதற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளை தலைவர் பாண்டி யன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு நிர்வாகிகள் ஜெயவேல், சலில்குமார், தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனை சேஷன் மாநில செயலாளர் ராஜம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில செயலாளர் முத்துசாமி ஆகியோர் பேசினர்.