districts

img

போராட்டத்தால் கிடைத்த குடியிருப்பு

22 ஆண்டுகளாக மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு சென்னை நகருக்குள்ளேயே வீடுகள் வழங்க முதல்வர் உறுதியளித்திருந்தார். வீடுகளை ஒதுக்க சென்னை மாநகராட்சி பணம் கேட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி கண்ணப்பர் திடல் மக்களுக்கு முன்பணம் எதுவும் வாங்காமல் குடியிருப்புக்கான ஆைணயை தமிழ்நாடு இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்களன்று (செப்.23) வழங்கினார். வீடு ஒதுக்கீட்டு ஆைணயை பெற்ற பெண்கள் தங்களுக்காக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்ட தோழர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.