districts

img

ஹிஜாப் அணிய தடை கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

திருவண்ணாமலை,ஆக.21-

     திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதிய மாணவி வெளி யேற்றப்பட்ட விவகாரத்தில் கல்வி அலு வலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் உற வினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

     திருவண்ணாமலை மாவட்டம், சோமாசிபாடி அருகே உள்ள அண்ணாமலை யார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஞாயி றன்று (ஆக.20) திருவண்ணாமலை கரி காலன் தெருவை சேர்ந்த   மாணவி ஷபானா என்பவர் ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுதியுள்ளார்.  

     அப்போது, ஹிஜாபை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். அகற்ற மறுத்தால் தேர்வு எழுத அனுமதி மறுத்து, தேர்வு அறையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். மாணவி வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்களன்று  மாணவியின் உறவி னர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.