விழுப்புரம், ஜன. 24- திருவெண்ணெய்நல்லூர் அருகே மாதம்பட்டு, அரும்பட்டு வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் திரு வெண்ணெய் நல்லூர் அருகே உள்ள அத்திப் பட்டு கிராமத்தில் மாதம்பட்டு- அரும்பட்டு இடையே ராக வன் வாய்க்காலை கடந்து செல்லும் வகையில் தரைப் பாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர் கதை யாக இருந்து வந்தது. இதனால் அந்தவழியாக செல்ல முடியாமல் மாணவர்கள், பணியாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து அதிகாரி கள் ராகவன் வாய்க்காலை கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே பொது மக்கள் ராகவன் வாய்க்காலை கடந்து செல்ல தற்காலிக மாக தரைப்பாலம் அமைக்கப் பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்காலிக மாக அமைக்கப்பட்ட தரைப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால் வெள்ளம் வடிந்த பின்னரும் தரைப்பாலம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இத னால் மாதம்பட்டு, அத்திப்பட்டு, அரும்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொது மக்கள், விவசாயிகள் பல கிலோ மீட்டருக்கு சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உயர்மட்ட பால கட்டு மானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.