உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் கலவை வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் ராணிப்பேட்டை மாவட்டஆட்சியர் ச.வளர்மதி புதனன்று (ஜூன் 19) நடைபெற்றது. இதில் கலவை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருளர் காலனி பகுதியில் சேதாரம் அடைந்த 40 வீடுகளை இடித்துவிட்டு பழங்குடியினர் நலவாரியம் மூலம் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தரக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் க. சேகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதில் விதொச மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி, விச மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, கட்சி உறுப்பினர்கள் காமாட்சி, பச்சையம்மாள், சங்கர், செல்வம், வீரமணி உடன் இருந்தனர்.