சென்னை, மே 14 -
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 1929 ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள், நடை பாதைகளில் உள்ள ஆக்கிர மிப்பு, கட்டிடக் கழிவுகளை அகற்ற மண்டல அலுவலர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படை, வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி கிழமைக ளில் முக்கிய சாலைகள், பொது இடங்கள் , நடை பாதைகளில் உள்ள ஆக்கிர மிப்புகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றி வருகிறது.
இதன்படி கடந்த மூன்று வாரங்களில் பொது இடங்கள் மற்றும் நடை பாதைகளில் இருந்த 563 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள், 1,366 தற்காலிக கூடாரங்கள் என 1,929 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.
சுவரொட்டி
பொது, தனியார் இடங்க ளில் குப்பை, கட்டுமானக் கழிவுகளை கொட்டுப வர்கள் மீது அபராதம் விதிக் கப்படுகிறது.
பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட் டிகள், சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடங்களில் தமிழ்நாட்டின் பண்பாட்டையையும் வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தப்படுகிறது.
இதனையொட்டி ஏப்.27 முதல் மே 11 வரை அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பெயர் பலகைகள் மற்றும் பொது இடங்களில் சுவ ரொட்டி ஒட்டிய 1072 பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது.
இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்தி குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.