districts

img

நொச்சிக்குப்பத்தில் மீன் கடைகள் அகற்றம் மீனவர்கள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு

சென்னை, ஏப். 12 - மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி நொச்சிக்குப்பம் முதல் பட்டினப் பாக்கம் வரையிலான சாலையோர மீன் கடைகளை மாநகராட்சி அகற்றியது. மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையில் தலை முறை தலைமுறையாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலை யில், சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்றி ஏப்.18ந் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து காவல்துறை பாது காப்போடு மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர கடைகள், ஐஸ் பெட்டி, வலை, மேசை உள்ளிட்டவைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் மீன வர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். நண்டு, மீன்களை சாலையில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மீனவர்களின் இடத்தை ஆக்கிர மித்துக் கொண்டு, மீனவர்களையே ஆக்கிரமிப்பாளர்கள் என்கிறது நீதிமன்றம். நீதிபதிகள் லூப் சாலை யில்தான் செல்ல வேண்டுமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு
மக்களின் வாழ்வாதார பிரச்சனை யில், மீனவ மக்களிடம் பேசி சுமூக தீர்வு காண்பதை விடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தான்தோன்றித் தனமாக செயல்படுவதை கைவிட வேண்டும். மீனவ மக்களுடன் அதிகாரிகள் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகே லூப் சாலையில் காலை, மாலை நேரங்களில் 2 மணி நேரம் வாகனங்கள் சென்றுவர மீனவ மக்கள் அனுமதித்தனர். அதன்பின்னர் படிப்படியாக அந்த சாலையை பொது போக்குவரத்து சாலையாக மாற்றி விட்டனர். இதற்கு மீனவர்களும், ஊர் பஞ்சாயத்துக்களும், மார்க்சிஸ்ட் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பெண்கள் பாரம்பரியமாக சாலையில் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் கடையை அகற்ற மாநகராட்சி யும், காவல்துறையும் முயற்சித்தனர். அப்போது பேச்சு நடத்தி கடைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டது. இந்நிலை யில், மாநகராட்சியும், காவல் துறையும் எந்தவித முன்னறிவிப்புமின்றி கடை களை அகற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றத்தின் செயலால், மீனவ மக்கள் வாழ்வாதாரம் இழந்து, பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கடலையும், கடற்கரையும் நம்பி வாழ்கின்ற மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அதே இடத்தில் அரசு நவீன மீன் அங்காடிகளை கட்டித் தர வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலை பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.