districts

img

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

சென்னை,டிச 20 -          வரலாறு காணாத கன மழை காரணமாக தூத்துக்குடி,  திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.      அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் 1000 பேருக்கு  நிவாரண உதவிகளை சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி சென்னை மாநகராட்சியிடம் வழங்கியது. இதற்கான நிகழ்ச்சியில் பேசிய சென்னை, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் இயக்குநர் சபரி நாயர் கூறுகையில், கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது  ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.        மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களின் நிலையை உணர்ந்து, சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்க மற்றவர்களும் முன் வர வேண்டும் என்று  நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.