districts

img

ஆழப்படுத்தும் பணிக்காக மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் வெளியேற்றம்

மதுராந்தகம், நவ.14 -  மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவை உயர்த்துவதற்காக நடைபெறும் கட்டமைப்புப் பணிக்கு ஏரிக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரியானது செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும்.  இந்த ஏரி 1058 ஹெக்டேர் பரப்பள வில் அமைந்துள்ளது.  694 மி.க.அடி.   நீரைத்  தேக்கி வைக்கும் திறன்  கொண்டது. இந்நீரினை கொண்டு  7604 ஏக்கர் பரப்பளவு  பாசன  வசதி பெற்றுவருகிறது. கடந்த 60 வருடங்களாக,  ஏரி தூர்வாரப்படாத தால், நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏற்பட்டு வரும் மண் அரிப்பால், ஏரியில் வண்டல் மண் படிந்து சுமார் 24 விழுக்காடு கொள்ளளவு குறைந்துள்ளது. இந்நிலையில் ஏரியை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மதுராந்தக விவசாயிகள்  கோரிக்கை  வைத்தனர். இதனைத்தொடர்ந்து,   ஏரியை தூர்வாரவும், கரைகளை பலப்படுத்தவும்,   ஏரியில் படிந்துள்ள வண்டல் மண்ணை கொண்டு ஏரியின்  அருகே உள்ள தாழ் நிலங்களை சுமார் 1.5 அடிக்கு உயர்த்திடவும், தற்போது உள்ள ஏரியின் கொள்ளளவான  530  மி.க. அடியிலிருந்து உயர்த்திடவும், ஏரியின் தற்போது உள்ள நீர்த்தேக்க ஆழமான 23.30 அடியில் இருந்து 24.94 அடியாக உயர்த்தும் விதமாக வும், ஏரியின் கலங்குகள் மறுவடி மைக்கப்பட்டு வருகிறது. இது 12 கதவு அணையுடன் கூடிய வெள்ள உபரி நீர் போக்கியில் மீண்டும் கட்டப்பட வுள்ளது. இதற்காக அரசு ரூ 120.24 கோடி நிதி  ஒதுக்கியுள்ளது. மேலும், ஏரியின் மதகுகள் மற்றும் வரத்து கால்வாய்கள் மேம்படுத்தப் படவுள்ளது.  

ஆழப்படுத்திவதில்  மூலம் கிடைக்கும் மிகை மண்ணின் ஒரு பகுதி ஏரியின் கரைகளை  பலப்படுத்த வும், ஏரியின் முழு கொள்ளளவு மட்டத்தினை உயர்த்துவதால், அருகிலுள்ள தாழ் நிலங்கள் பாதிக்காத வண்ணம், நில மட்டத்தை உயர்த்துவும், மிகை மண் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும்  ஏரியினை சுற்றியுள்ள கிராம விளைநிலங்களில் நீரில் மூழ்குவது தடுக்கப்படும். மேலும், 38 கிராமங்களில் குடிநீர் வசதி உறுதிப்படுத்துவதோடு, 3500 விவசாய குடும்பங்கள் 9000 விவ சாய பணியாளர்கள்  பயன் அடை வார்கள். இந்தப் பணியானது கடந்த 5  மாதங்களாக நடைபெற்று வரு கிறது.  இந்நிலையில் தற்போது பெய்து வரும் பருவ மழையினால் ஏரிக்கும் வரும் நீர்வரத்தானது அதி கரித்துள்ளது. ஏரியில் பணிகள் நடை பெற்று வருவதால் ஏரிக்குவரும் 650 கன அடி தண்ணீர் முழுவதும் கிளி ஆற்றின் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் இந்த பருவத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஏரியில் தூர்வாரும் பணியினை விரைவாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.