districts

உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம்

சென்னை, பிப்.25- சென்னை வடபழனி யில் உள்ள போர்டிஸ் மருத்து வமனை வளாகத்தில் அதிநவீன மருத்துவ சாத னங்களுடன் கூடிய ‘ஈரல் – கணையம் – பித்தநீர் மற்றும்  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்கப் பட்டுள்ளது. டாக்டர் சஞ்சய் பாண்டே  மற்றும் டாக்டர் புனீத் தர்கான் ஆகியோர் முன்னிலையில் தெற்கு ஆசியாவின் பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேக் விஜ் இம்மையத்தைத் தொடங்கி வைத்தார்.  இந்தப் மையம்  விரிவான மற்றும் முழுமை யான கல்லீரல் பாதுகாப்பு சிகிச்சையை நோயாளி களுக்கு வழங்கும் என்று துவக்க நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் விவேக் விஜ்   கூறினார். போர்டிஸ் சென்னை வடபழனி மையம் இதுவரை 45000க்கும் அதிகமான நோயாளிகளுக்கு இதயம்,  இதயம்-மார்புக் குழி அறுவை சிகிச்சை,  இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளது  ‘உலகெங்கும் நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை  இரண்டாம் இடம் வகிக்கி றது. நாட்டில் 25000க்கும் அதிகமானோர் ஆரோக்கிய கல்லீரலுக்காகக் காத்திருந்தாலும், ஒரு  சில ஆயிரம் நோயாளி களுக்கு மட்டுமே இணக்க மான உடலுறுப்பு கிடைக்கி றது. உடலுறுப்பு தானம்  செய்வோர் அதிக எண்ணிக் கையில் தேவைப்படுவதால், பொது மக்களிடையே உடலுறுப்பு தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று மருத்துவமனையின் பிராந்திய இயக்குனர் டாக்டர் சஞ்சய் பாண்டே கூறினார்.