districts

ரயில் முன்பதிவு கவுண்டர் குறைப்பு: பயணிகள் அவதி

சென்னை, ஜூலை 27-  சென்னையில் பழமை வாய்ந்த முக்கிய ரயில் நிலையங் களான எழும்பூர், சென்ட்ரலில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் குறைப்பால் லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய எழும்பூரில் 8 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டு வந்தது.  அதேபோல் சென்ட்ரல் நிலை யத்தில் 10 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டன. இதன் மூலம் பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட் விநியோகிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் கணினி பழுது, ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு கவுண்ட்டர்கள் மூடப்பட்டது. தானியங்கி டிக்கெட் எந்திரம், செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மேலும் சில கவுண்டர்கள் மூடப்பட்டது. அதே போல முன்பதி வில்லா டிக்கெட் விநியோக கவுண்டர்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் டிக்கெட் எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது.