districts

img

என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு

சென்னை, செப்.9- சென்னை என்எஸ்சி போஸ் சாலை யில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ 2 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஜெனரல் முத்தையா தெருவில் உள்ள திரு வேங்கடமுடையாள் வெங்க டேசப்பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களில் வாடகை தாரர்கள் இருந்து வரு கின்றனர். இந்த சொத்தின் ஒருபகுதியான என்எஸ்சி போஸ் சாலை, கதவு எண். 72ன் 1150 சதுர அடி உள்ள கட்டிடத்தை  டி.லதாமகேஸ்வரி மற்றும் பூல்சந்த் குப்தா ஆகி யோர் வாடகை செலுத்தா மல் மேல் வாடகைக்கு விட்டுள்ளதாக கூறப்படு கிறது.  அறநிலையத்துறை அமைச்சரின் ஆய்வின் போது இது கண்டு பிடிக்கப்பட்டதால் சட்டப் பிரிவு 78ன் கீழ் ஆக்கிர மிப்பாக கருதி அகற்ற உத்தர விடப்பட்டுள்ளது. இதை யடுத்து வெள்ளி யன்று (செப்9) சம்மந்தப் பட்ட இடம்  கையகப்படுத்தப் பட்டு பூட்டி சீலிடப்பட்டது.

;